நவம்பர், 2006 க்கான தொகுப்பு

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்

Posted in Uncategorized on நவம்பர் 12, 2006 by cablesankar

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்என்னடாது.. டெய்லி காலைல ஓன்பது மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு , ஏழு மணீ வரைக்கும் விடாம, விடாது கருப்பு போல விடாம உங்ளுக்கு லோன் வேணுமா? கிரெடிட் கார்ட் வேணுமா? ன்னு கேட்க ஆரம்பிச்சி, சரின்னு சொல்லிட்டா உங்க பெண்டாட்டி கூட இவ்வளவு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க? நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க? எவ்வளவு லோன் போவுது? மாசம் உங்க சம்பளம் என்ன? சொத்து ஏதாவது இருக்கா? யார் பேர்ல இருக்கு?ன்னு உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டாரு? சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா? உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா? மன்னிக்கணும்.. இதுவரைக்கும் எல்லாமே ஓகேதான். ஆனா அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும் அவங்க சுரண்டல்

1முதல் சுரண்டல்லோன் வாங்க அப்ளிக்கேஷனெல்லாம் கொடுத்த பிறகு உங்க செக்குக்காக காத்திருப்பீங்க உங்க லோன் அமொண்ட் 1 லட்சம்ன்னு வச்சீங்கன்னா.. 5000 ரூபாய் ப்ராசஸிங்ன்னு கழிச்சுட்டு 95,000தான் தருவாங்க.. ஆனா இந்த ப்ராசஸிங் பீஸ் பத்தி எதையும்மே முடிஞ்ச வரைக்கும் அந்த் டெலிகாலர் சொல்ல மாட்டாங்க.2 சுரண்டல் இரண்டு

இப்போ நீங்க எடுத்த லோனை முன்கூட்டியே முடிக்கீறீங்க.. அதுக்கு pre-closing chargesனு ஓரு அமொண்ட் அதாவது இப்போ சுமார் 4லிருந்து 5 பர்சண்ட் வரைக்கும் எடுத்துப்பாங்க.. இது என்னடாது கூத்துன்னு பார்த்தா.. அதுக்கப்புறம் தான் ஆரம்பிக்குது.. ஆட்டமே.. முன்கூட்டியே முடிக்கற லோனுக்கு அந்த நாள் வரையான வட்டிய ஓரு பைசாகூட விடாம, ப்ராசஸிங், க்ளோஸிங்னு எல்லா காசையும் வாங்கிட்டு, நம்ம செக்கை திரும்ப கொடுக்கணுமில்ல ஆனா அதுக்கு ஓரு ரூல்ஸ் வச்சுருக்காங்கஅதாவது ஓரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் க்ளோஸ் ஆகிற அக்கவுண்டின் செக்கெல்லாம் அடுத்த மாசம் நம்ம அக்கவுண்ட்டில கலக்ஷனுக்கு போட்டு நம்ம பாஸ் பண்ண சொல்லிட்டு அதுக்கப்புறம் நாம அந்த வங்கிய அணுகி நம்ம பணததை க்ளைம் பண்ணிக்கணும். அதாவது அவங்க மட்டும் அவங்க பணத்துக்கு ஓரு நாள் கூட விடாம வட்டி போட்டு வாங்கிப்பாங்க, ஆனா நம்ம பணத்த அவங்க பத்து பதினைந்து நாள் வச்சிக்கிட்டு அதுக்கு ஓரு ரூபாய் கூட வட்டி தரமாட்டாங்களாம் என்ன அநியாயம்? சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் போதே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல.. இத ஓரு வாட்டி GE கண்டரி வெயிட் என்கிற நிறுவனத்தில் கேட்க போய் அவங்க என்ன தனியா ஓரு ரூமிற்க்கு கொண்டு போய் உன்னால முடிஞ்சத பாத்துக்கன்னு என் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளி விட்டாங்க.. அதுக்கப்புறம் நான் ஓரு தர்ணா போராட்டம் லெவலிலே நடு ரோட்டில் தனிமனிதனாக பிரச்சனை பண்ணி. போலீஸ் வந்து, அந்த பணதத கொடுத்தாங்க.. அப்போ ஓரு ஆள் என்ன கேட்டாரூ … 100 ரூபா காசுக்கு ஏன்யா இப்படி பண்ணறேன்னு? நான் அவ்னை ஏற இறங்க பார்த்து, அப்ப ஓரு நூறு ரூபா இருந்தா கொடேன்னு கேட்டது அவரு ஸ்டாப் ப்ளக்கில காணாம போனாறு தையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா.. அந்த பணத்த வாங்கறதுக்கு உங்களுக்கு உரிமையிருக்கு .. ஆனா யாரும் கேட்கற்தில்ல.. தயவு உங்க பணத்தை எக்காரணத்தை கொண்டும் விட்டு வைக்காதீங்க..அடுத்த சுரண்டல்… விரைவில்..

www.shortfilmindia.com

www.classiindia.com

குறும்படங்களை பற்றிய உங்கள் கருத்து

Posted in Uncategorized on நவம்பர் 8, 2006 by cablesankar

வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். எவவளவோ படங்களை பற்றி படம் பார்த்து விமர்சனம் எழுதும் நீங்கள் , உங்களுக்காக ஓரு வேண்டுகோள்.. தமிழில் வ்ரும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை  பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்க படுகிறது அது சரி குறும்படங்களை எங்கே பார்பது என்கிறீர்களா? கவலை வேண்டாம் இதோ.. www.shortfilmindia.com மில் சென்று பார்த்து உங்கள் விமர்சனங்களை sankara4@shortfilmindia.com க்கு மினஞ்சலோ அல்லது உங்களது ப்ளாகிலோ தெரியப்படுத்ததும்

நன்றி

சங்கர் நாராயண

www.shortfilmindia.com

www.classiindia.com

www.cablesankar.blogspot.com

www.cablesanker.wordpress.com

Posted in Uncategorized on நவம்பர் 8, 2006 by cablesankar

இலவசம்- தேன்கூடு போட்டிக்காக..


இலவசம்- தேன்கூடு போட்டிக்காக..

என்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னா சும்மாவா? ஏன்னா இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம்…தான், புக் வாங்கினா புக் விலயவிட இலவசம் விலை அதிகமா இருக்கு. அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. அது சரி, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது பான் தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு சொல்லி தப்பிச்சேன்.. ஆனாலும் சுத்த தத்தி முததடவயே சரியா பார்த்து வாங்கியிருந்தா இந்த அலைச்சல் இல்லேல்ல என்று அன்பு கொஞ்சல் வேறு. இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது. அதற்கு பதில் என் மனைவியிடமிருந்து வந்தது. “இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்.” என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்…கடவுளே.. என்ன கூத்துடாது… இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது…அதுவும் உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு கிடைக்கும்…இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா..? மச்சானா? அவர்கள் கூட நமக்கு இலவசமாய ஏதாவது கொடுத்தால் அது மச்சானாக இருந்தால் தமது சகோதரிக்காகவும்,மாமனாக இருந்தால் தனது மருமகனுக்காகவும்தான். இலவசமாக எது கிடைத்தாலும் அதன் தரத்தை பற்றி கவலைப்படாமல் கிடைத்தால் போதும் என்று நாம் நினைப்பதாலும், எது கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு ஓரு இலவசத்தை கொடுத்தால் பொருட்களின் தரமில்லையென்றாலும் வாங்குவார்கள் என்று வியாபாரிகள் நினைக்கிறார்கள். இப்படி இலவசமாய் பினாயில் கிடைத்தாலும் குடிக்கிற மனநிலையில் உள்ளவர்களூக்கு இலவசத்தை பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. யாராவது இலவசமாய் ஐடியா இருந்த்தால் சொல்லுங்களேன்.. இலவசத்தை பற்றி தேன்கூடு போட்டிக்கு அனுப்ப….

சங்கர் நாராயண் ( கேபிள் சங்கர்)

www.shortfilmindia.com

www.classiindia.com

www.cablesankar.blogspot.com

www.cablesankar.wordpress.com

Hello world!

Posted in Uncategorized on நவம்பர் 7, 2006 by cablesankar