சரோஜா – விமர்சனம்

Posted in சினிமா அடையாளங்களுடன் , , on அக்டோபர் 12, 2008 by cablesankar

ஓரு பரப்பரப்பான காமெடியும், ஆக்‌ஷனும் கலந்த திரில்லரை பார்த்து ரொம்ப நாளாச்சா? அப்ப சரோஜா சரியான படம். வெங்கட் பிரபு டீமோட சென்னை-28 வெற்றி ஓண்ணும் சும்மா வந்ததில்லைன்னு புரூப் பண்ணியிருக்காங்க.

ஓரிசாவிலிருந்து ஓரு கெமிக்கல் லாரி கிளம்புகிறது. இன்னொரு இடத்தில் பணக்கார ப்ரகாஷ்ராஜ் பெண் வீட்டிலிருந்து வெளியேறி கடத்தபடுகிறாள். ஹைதராபாத்தில் நடக்கும் இந்தியா பாக் மாட்சை பார்க்க, spb ச்ரண், ப்ரேம்ஜி அமரன், சிவர், மற்றும் அவரின் தம்பி, நால்வரும் ஓரு பழைய காரவனில் கிளம்புகிறார். இந்த மூண்றும் இணைகிற இடம் தான் சரோஜாவின் முக்கிய புள்ளி.

படத்திற்கு மிகப் பெரிய பலம், ஓளிப்பதிவாளர் சக்தி சரவணனும்,யுவனும் (இருவரும் படத்தில் நடித்தும் இருக்கிறார்கள்). அது தவிர படம் முழுக்க விரவி இருக்கும் நகைச்சுவை, சாதாரணமாக திரில்லர் கதைகளில் நடுவில் நகைச்சுவை இருந்தால் டெம்போ போய்விடும் என்று சொல்வார்கள். ஆனால் வெங்கட் பிரபுவுக்கு தன்னுடய தம்பியின் பலம் தெரிந்து இருக்கிறது. அவரை வைத்து அவர் அடிக்கும் லூட்டி இருக்கிறதே.. அவர்களுடனே ஓடிக் கொண்டிருக்கும் பரபரப்புக்கு நடுவுல் சிரிக்காமல் இருக்க முடியாது.

ப்ரேம்ஜி ஓவ்வோரு பெண்களை பார்த்தும், ஆயிரம் தாமரை மொட்டுகளே.. ட்யூனுடன் வெள்ளை நிற தேவதைகள் வருவதும், அதற்கு அவரின் ரியாக்‌ஷனும் சும்மா சொல்லக்கூடாது. தம்பி உடையான் ப்டைக்கஞ்சான்.


சரணின் இயல்பான நடிப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும், ஓவ்வொரு சிச்சுவேசனிலும் அவரின் ரியாக்‌ஷ்ன்கள் அருமை அதிலும் பெண்டாட்டியிடம் திட்டு வாங்கும் இடத்தில் ..படத்தை பாருங்க அப்ப தெரியும்.

ப்ரேம்ஜி அமரன் அவரை பத்தி சொலலவே தேவையில்லை.தன்னுடய தம்பியின் பலம் எதுன்னு தெரிஞ்சு அவரை இயல்பா பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் படம் நெடுகிலும் அவர் பயன்படுத்தியிருக்கும் நகைச்சுவை மிக இயல்பாக இருக்கிறது. அதுவும் இளைஞர் நால்வரின் பேச்சுக்கள்.

படத்தில் சென்னை 28 நடித்த் பலர் ஓரு ஓரு காட்சிகளில் தலை காண்பித்து இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் படம் முழுவதும் டென்ஷனாகவே இருக்கிறார். ஜெயராமிற்கு கடைசி காட்சியில் தான் நடிக்க சான்ஸ் அதை முழுதாக் பயன்படுத்தியிருக்கிறார்.

வில்லன் சம்பத், அவரின் காதலியாக வரும் நிகிதா, அவரது அடியாளாக வரும் நாகேந்திரன் என்று யாரையும் குறை சொல்ல முடியாது.

ஓரு நல்ல ஜாலியான திரில்லரை பார்கக தயாராகுங்கள்.

பத்து பத்து – விமர்சனம்

Posted in சினிமா அடையாளங்களுடன் , , on அக்டோபர் 12, 2008 by cablesankar


நான் சமீபத்தில் பார்த்த இன்னொரு படம் பத்து பத்து. அதில் நடித்த ஓரு நடிகர் என்னையும் என் நண்பர்களையும் அழைத்துச் சென்றார். இரண்டாவது நாளான அன்று மாலை காட்சியில் சுமார் 400க்கும் அதிகமான நபர்கள் தியேட்டரில் இருந்தது குறித்து ஆச்சர்யப்பட்டேன்.

எதை எதிர்பார்த்து இவ்வளவு கூட்டம்? ஹீரோ ஹீரோயின் இல்லாத படம் என்று விளம்பரபடுத்தியதாலா? அல்லது வித்யாசமான படமாய் இருக்கும் என்ற எண்ணத்தினாலா? என்று குழம்பியவாறே நான் படம் பார்க்க ஆரம்பித்தேன்.

சரியாக 10.10 ஓரு கொலை நடைபெறுகிற்து. அந்த கொலையை யார் செய்திருக்கக்கூடும் என்று பல கோணங்களில் இன்வெஸ்டிகேசன் செய்கிறார் “போஸ் வெங்கட்” ஓவ்வொருவரையும் அவர் விசாரிக்கும் போது இவர்தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருப்பது திரைக்கதையில் ஓரு நல்ல உத்தி,

ஆரம்பத்தில் அமெச்சூர் தனமான காட்சியமைப்புகள், நடிப்பு, என்று ஆரம்பித்த படம், சோனா வந்தவுடன் சும்மா பாட்டிலிலிருந்து விடுபட்ட தீபாவளி ராக்கெட் போல் சும்மா விர்ரென்று கிளம்புகிறது படம்.

அதுவும் ஓரு பையன் மேலே பேனை மாட்ட,கீழே சோனா விலகிய மேலாக்குடன் லஞ்சையுடன் மேலே பார்க்க, அதை பார்த்து அவள் வீட்டிலிருக்கும் ஓரு பையன் வெகுண்டெழுந்து அவனை துரத்திவிட்டு, “இனிமே உங்களுக்கு எதாவது வேணும்ன்னா என்னை கேளுங்க”ன்னு சொல்வது, அதற்கு சோனாவின் ரியாக்ஷனும்,பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது எப்படி 400 பேர்கள் தியேட்டருக்குள் வந்தார்கள் என்று.

ஆனால் இதையெல்லாம் மீறீ படத்தின் திரைக்கதையில் இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பாகி, யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிகிறது.

ஓரு நல்ல திரில்லர் அவர்கள் எடுத்த முறையினால் B கிரேட் திரில்லராகிறது.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் சோனாவுக்கு ஓரு ஸ்பெஷல் “ஜே” போடுங்க…

Happy Days

Posted in சினிமா அடையாளங்களுடன் , , on அக்டோபர் 11, 2008 by cablesankar


ஜலதோஷம் பிடிக்குமே.. என்று கவலைப்படாமல் மழையில் நினைந்திருக்கின்றீர்களா? அந்த நாள் உங்களின் ஹேப்பி டேஸாக இருக்கும். வாழ்கையில் இப்போது சின்ன விஷயங்களாய் தெரியும் விஷயத்துகெல்லாம் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி மத்தாப்பாய் சிரித்தும், வெடித்தும் மகிழ்ந்திருக்கின்றீர்களா? அந்த நாட்கள் உங்களின் கல்லூரி நாட்களாய் தான் இருக்கும் அந்த ஹேப்பி டேஸை உங்களால் எப்பவுமே மறக்க முடியாது. வாழ்கையில், படிப்புடன் நட்பை, காதலை,லீடர்ஷிப் போன்ற பல விஷயங்களை கற்று தரும் நாட்கள் தான் கல்லூரி காலமான ஹேப்பி டேஸ். சமீபகாலத்தில் நீங்கள் இவ்வளவு இளமையான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..

படத்தின் ஆரம்பமே ஓரு அழகான விஷயம்.

தூங்கி எழும் சந்து முதல் முதலாய் இன்ஜினியரிங் காலேஜ் போக போகிறான். அவன் அப்பா அவனை கூப்பிடுகிறார். ஓரு பேனாவை கொடுத்து ‘ இது என் அப்பாவின் பேனா . அவர் எனக்கு கொடுத்தது. இப்போது உனக்கு கொடுக்கிறேன்.” என்று சொல்ல.. அதற்கு அவன் மனதிற்குள் “நல்லவேளை.. அட்வைஸ் இல்ல..; ஓன்லி செண்டிமெண்ட் “ நினைப்பதில் ஆரம்பித்து.. அந்த வயது இளைஞர்களை கண் முன் ஓடவிட ஆரம்பிக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா..

மேல் தட்டு குடும்பத்திலிருந்து வரும் அழகான மது. (சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை நாயகி மதுவிக்கு சரியான் பொருத்தம்.. அவர் தான் நடிக்கிறார்.)

அதிபுத்திசாலியான ரொபாடிக்ஸில் ஆர்வம் உள்ள அப்பாவியான டைசன்..

ஏழை குடும்பத்திலிருந்து சீட் கிடைத்து எப்படியாவது முதல் மாணவனாக வேண்டும் என்ற வெறியோடு சேரும் செல்ஃபிஷான சங்கர்.

டொனேஷன் சீட்டில் காசு கொடுத்து சேரும் புரத்ட்டூர் எம்.எல்.ஏ. பையன் ராஜேஷ்.

தன் அழகை பற்றி, அவ்வளவாக கவலைபடாடத, ஆண்பிள்ளை போல் நடந்து கொள்ளூம் அப்பு என்கிற அபர்ணா.

கண்களாலேயே பேசும் சீனியர் ஷாரப்ஸ்,

ஸ்ரீகாக்குளத்திலிருந்து, தெலுங்கு மீடியத்திலிருந்து வரும் மாணவன், வெளிவட்டார பழக்கமே இல்லாமல் வீட்டிலிருந்தே படித்து காலேஜிக்கு வரும் பாண்டு, குண்டு சீனியர், ஜூனியர் மதுவை காதலிக்கும் சினியர் கேரக்டர்கள் என்று எல்லா கேரக்டர்களும் நாம் பார்த்து, மகிழ்ந்த நண்பர்கள் போலவே தெரியும்.

இவர்களுக்குள் நடக்கும் அந்த நாலு வருட வாழ்கை அவர்களுக்கு என்ன என்ன கற்று தருகிறது என்பதை அவ்வளவு இயல்பாய் சொல்லியிருக்கிறார். இவர்கள் எல்லோரும் நட்பு எவ்வாறு உருவாகி இருக்கமாகிறார்கள்? சந்துவிக்கும், மதுவிக்கும், அப்புவுக்கும் ராஜேசுக்கு, டைசனுக்கும் சீனியர் ஷாரப்ஸுக்கும், சங்கருக்கும், சங்கீதாவுக்கும் இடையில் ஏற்படும் காதல், அதற்கு அப்புறம் நடக்கும் ஊடல், மோதல், அவர்களின் உறவு பலப்படுதல்,அந்த உறவின் காரணமாய் அவர்கள் வாழ்கையில் பெரும் வெற்றி தோல்விகள் என்று படம் முழுவதும் வாழ்ந்த உணர்வு உங்களுக்கு வந்தே தீரும்

சங்கரின் காதலி சங்கீதாவின் வரவால் நன்றாய் படிக்கும் மாணவன் அரியர்ஸ் வைப்பதும், அவள் அவனை ஏமாற்றி கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த டைசன், அவனுக்காக தன்னுடய கம்ப்யூட்டர் சயின்ஸ் குருப்பை விட்டு கொடுத்த டைசன், அவளை நம்பாதே என்று சொல்லும் போது அவன் டைசனை அடிக்க, அவன் ஓரு செல்பிஷ் என்று தெரிஞ்சிகிட்டே அவனுக்கு போய் அட்வைஸ் பண்றியே அவனுக்கு பிரண்ட்ஷிப் வேல்யூவே தெரியாது என்று சந்து சொல்ல.. அப்போது டைசன் அவனுக்கு தெரியலைன்னா என்ன நாம அவனுக்கு பிரண்ட்தானே என்று சொல்லும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது.

பார்க்கும் பெண்களையெல்லாம் காதலிக்கும் ராஜேஷ், அவனுக்கு ஹெல்ப் பண்ணும் அப்பு, இடையில் வரும் இங்கிலீஷ் லெக்சரர் கமலினி முகர்ஜி.. என்று கலந்து கட்டிய ஓரு சுகானுபவம்.. படத்தில் அங்காங்கே ஃபாண்டஸியாய் காட்சிகள் வந்தாலும் அந்த வயதில் பாண்டஸியில்லாத வாழ்கை இருந்திருக்குமா?

சந்துவிக்கும், மதுவுக்கும் இடையே காதல் அரும்புவதற்கு முன்பே அவளை கிஸ் கேட்க, அவளின் அப்பா.. அதை கேட்டு விட அதனால் அவமானம் அடையும் மது என் தந்தையிடம் மன்னிப்பு கேட்ட்டல்தான் என்று சொல்ல.. என்னனு மன்னிப்பு கேட்க, உங்க பொண்ணு கிட்ட கிஸ் கேட்டேன் சாரி ன்னா. அது என்னால் முடியாது.. என்பதில் ஆரம்பித்து ஈகோவினால் இருவரும் இரண்டுவருடத்திற்கு பேசாமல் ஓன்றாகவே இருப்பதும், புதிய ஜூனியர் பெண் சந்துவுடன் பேசுவதை பார்த்து பெருமுவதும், அழகான கவிதை..

ஜூனிய்ர் டைசனுக்கும், சீனியர் ஷராப்ஸுக்கும் இடையில் ஏற்படும் காதலை ஏற்றும் ஏற்காமலும் தன்னுடய கோல் வேறு எதிலும் நான் கட்டுபட்விரும்பவிலலை என்றும், டைசன் அவளுக்குகாக் எங்கும் போனாலும் எனக்காக ஓரு சான்ஸ் வரும் வரை காத்திருப்பேன் என்பதும். இந்த காட்சியில் காதலை சொல்லி, அல்லது சொல்லாமல் நாம் காலேஜில் வாழ்ந்த காலங்களை உங்கள் கண் முன் வரவில்லை என்றால் அது மிகப் பெரிய பொய்.

இவர்களின் காலேஜ் வாழ்கையின் முடிவில் கல்லூரி முதல்வர் அவர்களை அழைத்து, இதுநாள் நீங்கள் வாழ்ந்தது உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஹேப்பி டேஸ்.. இத்தோட முடிய போகுது.. இனிமே வரப்போற் நாட்கள் உங்க்ள் வாழ்வில் ஏற்படப்போகும் பர்பஸ்புல் டேஸ். என்பது நிதர்சனமான உண்மை என்பதை நாம் கல்லூரியின் கடைசி நாள் அன்று உணர்ந்திருப்போம்.

அற்புதமான ஓளிப்பதிவு, மைக்கேல்.ஜே.மேயரின் அற்புதமான இசை, நடித்த அனைவரும் புதுமுகங்கள். என்று சத்யம் செய்தால் தான் நம்புவீர்கள்.. கமலினி முகர்ஜி தவிர.. இயல்பான வசனங்கள்.. மனதை வருடும் ரிரிக்கார்டிங்.. அற்புதமான இயக்கம் என்று எதையுமே குறை சொல்ல முடியாத படம்.

படத்தை பார்த்தவர்கள் காலேஜ் என்றால் நட்பு, காதல், இதைதவிர வேறேதும் கிடையாதா.. இதையெல்லாம் பெரிய ப்ராப்ளமா என்று கேட்பவர்களுக்கு உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.. நீங்கள் படிக்கும் போது எதிர்கால இந்தியா பற்றியா நினைத்து வாழ்ந்திர்கள் என்று.. படத்தை பார்க்கும் போது அவர்களின் வாழ்கையாய் படத்தை பார்த்தால் இழந்த ஹேப்பிடேஸை நமக்கு கொண்டுவரும் படம்.. அட்லீஸ்ட் நிஜத்தை மற்கக…

இயக்குனர் சேகர் கம்மூலாவை பற்றி..

அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த இவர் திரை துறையின் மேல் உள்ள் ஆர்வத்தால் வேலையை விட்டு முதல் முதலாய் “டாலர் டிரீம்ஸ்” என்ற படத்தை இயக்கினார். அதில் அவருக்கு ஓரு அடையாளம் தெரிய, அடுத்து, “ஆனந்த்” என்ற் ஓரு இனிமையான படம், அதற்கு அப்புறம் “கோதாவரி’என்ற ஓரு அருமையான் காதல் கதை, இப்போது “ஹேப்பி டேஸ்” அடுத்த படத்துக்க்காக ஆவலாய் காத்திருக்கிறேன்..

டிஸ்கி : Happy days படத்தை தமிழில் தயாரிப்பதாய் பிரகாஷ்ராஜ் உரிமை வாங்கி வைத்துள்ளார். ஓளிப்பதிவாளர் குகன் இயக்குவதாய் இருந்தது, அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. ப்ரகாஷுக்கு இருக்கும் பணப்ப்ரச்சனையில் அது நடக்குமா என்றும் தெரியவில்லை..

சட்டம் உன் கையில்

Posted in சமூகம்/ அரசியல் on அக்டோபர் 10, 2008 by cablesankar

பொது இடத்தில் புகை பிடிக்க தடை சட்டத்தை புகை பிடிப்பவர்களூம் முணுமுணுத்துக் கொண்டே ஆதரித்தாலும், எல்லோரும் பயப்படுவது அதை நடைமுறை படுத்தும் போது நடக்க போகும் அராஜகத்தை நினைத்துதான். ஏன் என்றால் நம் நாட்டில் குற்றம் நடப்பதை தடுப்பதற்காக காவல் துறை இல்லாமல், அது நடக்க விட்டுவிட்டு அப்புறமாய் வந்து தண்டிப்பது அவர்க்ளது வாடிக்கை..

உதாரணமாய் ஓருவன் ஃபிரி லெப்ட் இல்லாத இடத்தில் திரும்ப முயற்சிக்கும் போதே அந்த டிராபிக் கான்ஸ்டபிள் அந்த தெருவின் முனையிலேயே நின்று அவனை தடுத்து அறிவுறுத்த வேண்டியதுதான் அவர் கடமை. ஆனால் அவர் என்ன செய்கிறார்.. ரோட்டின் உள்பக்கத்தில் ஓளிந்து நின்று கொண்டு அவனை மடக்கி “டேக் த 25” வாங்கி அவனை திரும்ப அனுப்பாமல் தவறான பாதையிலேயே அனுப்பி வைக்கிறார்.

அதே போல் அவர்கள் போடும் சட்டங்களூம் அவ்வளவு ஈஸியாக மக்களுக்கு புரியும் படி இருக்காது. உதாரணமாய் புகை பிடிக்கும் சட்டத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது.. என்று சொல்லி பல இடங்களை சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆனால் தெரு, மற்றும் பார்க் எல்லாம் பொது இடம் தானே..அங்கே புகைக்கலாம் என்கிறது விதி. ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் இந்த் விதி எல்லாம். போகிற போக்கில் 4 ரூபாய் சிகரெட்டுக்கு 25 ரூபாய் கட்டிங் கொடுக்க வேண்டியிருக்கும்.

இப்படி எல்லோரும் சட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ளகூடிய முறையில் சட்டத்தை இயற்றுவது என்ற பழக்கமே இல்லை..நம் தமிழக அரசு ஹெல்மெட் விஷயத்தில் அடித்த குழப்படி சட்டம் இருக்கிறதே அதைவிட குழப்பம் ஏதாவது இருக்கிறது. பின்னாடி இருக்கிறவங்க போடணும், போடகூடாது, பெரியவர்கள் போட் வேண்டாம்னு ப்பா.. அந்த சட்டத்தை பற்றி நான் ஓரு டிராபிக் சார்ஜெண்டுடன் சண்டை போட்டது பற்றி ஓரு பத்திரிக்கை போகிற போக்கில் எங்களுக்கு தெரியாமலே நானும் அந்த அதிகாரியும் வாதாடும் காட்சியை புகைபடமாய் எடுத்து வெளியிட்டது. உலக புகழ் நமக்கு எப்படியெல்லாம் கிடைக்கிறது.

இன்னொரு உதாரணம் .. ஓரு வயது வந்த பெண்ணும், ஆணும் இருவரும் இஷ்டப்பட்டால் எந்த விதமான நிர்பந்ததிற்கும் ஆட்பாடாமல் அவர்களுக்கு உடலுறவு கொண்டால் அதை சட்டம் தடுக்க முடியாது.. ஆனால் கணவன் மனைவி அல்லாத ஓரு ஆணும், பெண்ணும் ஓன்றாக இருந்து உடலுறவு கொண்டால், அந்த பெண்ணின் கணவனோ, அந்த ஆணினின் மனைவியோ புகார் கொடுக்காத வரை அவர்கள் மீது கேஸ் போட முடியாது. ஆனால் அவர்களை போலீஸ் பிடித்தால் விபசார வழக்கு போட்டு விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் அல்லது போட்டு விடுகிறார்கள். வயது வந்த இருவர் அவர்க்ளுக்கு இருவரின் சம்மதத்தின் பேரில் உடலுறவு கொண்டால் தவறு அல்ல என்று சட்டத்தில் இருந்தாலும், சமுதாயத்தில் தங்களது பெயர் கெட்டுவிடுமே என்று பயந்து யாரும் போராடுவது இலலை..

விபசாரம் செய்பவர்களை கூட போலீஸ் செய்திதாளகளில் வருவதை போல் ரோட்டில் விபசாரத்துக்கு அழைத்தார்கள், போலீஸ் மாறு வேடம் அணிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து அதை வாங்கும் போது சுற்றி வளைத்து பிடித்ததாகதான் கேசை ஜோடிப்பார்கள். ஏன் என்றால் சட்டப்படி மேற்சொன்ன விதிகளின் படி அங்கிருக்கும் ஆண், பெண் இருவரையும் உடலுறவு கொண்டார்கள் என்று கைது செய்ய முடியாது.. அதனால் ஜோடித்து தான் கேஸ் எழுதுவார்கள்.. கன்னட ப்ரசாத் போன்றவர்கள் என்ன ரோடில் அழகிகளை வைத்து கூவிக் கூவியா ஆள் பிடிக்கிறார்கள்.(அவர்கள் அழகிகளா என்பது வேறு விஷயம்?)

சட்டத்தை பற்றி தெரிந்தாலும் போராடாமல் பல பேர் அசிங்கம், நம்கேன் வம்பு என்று விட்டு விடுவார்கள் .ஆனால் சில ஆண்டுகளூக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் ஓரு அரசாஙக உத்யோகத்தில் இருந்த ஓரு நபர் தான் காதலித்த பெண்ணுடன் வெளியூர் சென்று அங்கிருந்த ஓட்டலில் தங்கியிருக்க, அப்போது அங்கே ரெய்டுக்கு வந்த போலீஸார் அவர்களையும் கைது செய்து, விபசார வழக்கு போட்டுவிட்டார்கள்.. அதனால் அவருக்கு அரசாஙக வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் விடவில்லை.. கோர்ட்டில் போலீசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மேலே சொன்ன சட்டத்தை வைத்து வாதாடி இழந்த தன் அரசாஙக் வேலையை திரும்ப பெற்று, தன் காதலியை மணந்தார்..எல்லோரும் தங்களது உரிமையை தெரிந்து கொண்டால நம்முடைய சட்டம் எந்த அளவுக்கு நமககு ஆதரவாக இருக்கிறது, அதை போலீஸ் அத்துமீற்ல் செய்யும்போது எதிர்கவும் துணிய வேண்டும்.

எதற்காக நான் இந்த உதாரணத்தையெல்லாம் சொல்கிறேன் என்றால், வெளியே சொல்ல அசிங்க படுகிற விஷயமாய் இருப்பினும் ஓரு தனிமனிதன் தன் உரிமையைக்க்காக, போராடி வென்ற்து, நம் சட்டத்தில் எந்த அளவிற்கு நம்க்கு ஆதரவாக உள்ளது என்பது புரியும். என்பதற்காகதான்.

அதற்காக நான் புகை பிடிப்பதையோ, அல்லது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை ஆதரிக்கிறேன் என்றோ நீஙக்ள் நினைக்க்கூடாது. எல்லோரும் தங்களது உரிமையை விட்டுக் கொடுக்காமல் அதை தெரிந்து நடத்தால் நாமே தவறு செய்ய மாட்டோம்.. அதை மீறி நம் உரிமையை பறிக்க முயன்றால்.. அதான் சொன்னேனே.. சட்டம் உன் கையில்

நெ.1 டிவி சேனல் எது???

Posted in Uncategorized அடையாளங்களுடன் , on செப்டம்பர் 10, 2008 by cablesankar

1  சன்

2  கலைஞர்

3 விஜய்

4 ஜெயா

5 ராஜ்

6 மக்கள்

7 தமிழன்

8 இமயம்

9 மெகா

10 வசந்த

11 விண்

en bidveritser

Posted in Uncategorized on மார்ச் 4, 2008 by cablesankar

BDV-251887-BDV

சிவாஜி.. பார்த்தாச்சா..?

Posted in Uncategorized on ஜூன் 22, 2007 by cablesankar

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்ள 25 நாடுகளில் ஓரே சமயத்தில் சங்கரின் ‘சிவாஜி” படம் ரீலீஸ் ஆகியிருக்கிறது. கடந்த 14ஆம் தேதி முதலே.. தமிழ்நாட்டில் எல்லார் வாயிலும் “சிவாஜி டிக்கட் வாங்கிட்டியா?? வாங்க்கிட்டியா? என்ற கேள்வி தான். அப்படி ஓரு சிவாஜி ஜூரம். உலகமே எதிர்பார்க்க வைத்த ஏவிஎம். ரஜினி, சங்கர், ஏ.ஆர். ரகுமான். போன்ற ஜாம்பவான்கள் சேர்ந்திருக்கும் படம், என்வே எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும், எங்கே முதல் நாளே படத்தை பார்க்காவிட்டால் எதிர்படும் நண்பர்களிடம் அவமானப்பட வேண்டுமே என்று.. முதல் நாளே.. எனக்கு தெரிந்த தியேட்டர்களை காண்டேக்ட் செய்து, ஓரு வழியாக, 10 டிக்கெட்டை வாங்கிவிட்டேன்.. அந்த பத்து டிக்கெட்டுக்கு நான் நீ என்று போட்டி வேறு. நான் சிலருக்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் போக, அதனால் சில நண்பர்கள், விரோதியாக, பாவிக்க, ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் எதிர்பார்பெல்லாம், என்னுடய டிக்கெட்டை அவர்களீடம் கொடுத்தாவது, என் நட்பை நிருபிக்க, பிரயத்தனம் செய்தார்கள்.

இவ்வளவு, பரபரப்புக் கிடையே, ஓரு வழியாக, தியேட்டர் வாசலில் இருந்த நான்கு தியேட்டர் கும்பலை கடந்து, ஓரு வழியாக, நசுங்கி, பீழிந்து, உள்ளே, போனதும், படம் ஆரம்பித்துவிட்டார்கள். படம் ஆரம்பித்ததும், ரஜினியை, சிறையில் காட்டும் காட்சியில், ஓரு பத்து வருட குறைந்த இளைமையில், பார்த்ததும், நிமிர்ந்து உட்கார வைத்தார் ரஜினி, அதற்கு அப்புறம் தான் , படட்த்தில் காமெடி என்ற பெயரில், ஸ்ரேயாவின் வீட்டில் போய் ரஜினி, பழக, ஆரம்பிப்பதும், அவர்கள் தமிழ் கலாசரத்தின்படி, பழக, அனுமதிகாமல், வெளியே, அனுப்ப, எதிர்வீட்டு சாலமன் பாப்பையா.. தன் இரண்டு கரி குண்டு பெண்களை அழைத்து, அவர்களுடம் பழக, அழைக்க, ஓரே,, காமெடி என்ற பெயரில் கூத்து, அது மட்டுமில்லாம. ரஜினியோடு வரும் விவேக் ஓவர்.

அதன் பிறகு, வழக்கமான, கதை, கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்தது என்றே என்க்கு தெரியாது. ஏன் என்றால் என்னை மீறி நான் கண்யர்ந்து விட்டேன். அதற்கு அப்புறம் வரும் திருப்பம், ரஜினி, பாப்பர் ஆவது, சுமனை அவர்வீட்டில் ரெய்டு விட்டு எல்லா கருப்பு பணத்தையும் அபேஸ் செய்தவுடன் படம் முடிந்து விட்டது. அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம். ஓரே காமெடி. அதில் உட்சபட்சமான காமெடி, ரஜினி தனக்குத்தானே மின்சாரத்தை பாய்ச்சி கொள்வதும், சில மணி நேரங் கழித்து அவரை ரகுவரன் பிழைக்க வைப்பது,

அதற்கு அப்புறம் ரஜினி மொட்டை அடித்துவந்து, செய்யும் கூத்தெல்லாம். படு கொடுமை. படத்தில் ஓரே ஆறுதல். ரஜினி, ரஜினி, ரஜினி,

அதெல்லாம் சரி, கருப்பு பணத்தை பற்றி, பல கோடி செலவு செய்து, அந்த படத்தை வெளியிட விநியோகதர்களிடம், தினசரிகளில் மடித்து கொடுக்கப்பட்ட, கருப்பு பணத்தை எந்த சிவாஜி, பிடிங்கிக் கொள்வார்.

ஜம்பது ரூபாய்க்கு மேல் யாரும் டிக்கெட் விற்கக்கூடாது என்ற உத்தரவை, காற்றில் பறக்கவிட்டு, நூறு, இருநூறு, என்று விற்பனை செய்த தியேட்டர்காரர்கள், அவர்கள் கலைக்ட் செய்த கண்க்கில் வராத பணத்தை எந்த சிவாஜி பிடிங்கிக் க்கொள்வார்.

யாமறியேன் பராபரமே….

ஓரு தரிசனத்தின் திரைக்கதை

Posted in Uncategorized on பெப்ரவரி 25, 2007 by cablesankar

ஓரு தரிசனத்தின் திரைக்கதை

என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்திவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து, கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம். அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று எழுந்து “என்ன நீங்கள் …. உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க… நாம என்ன ஹனிமூன் டூருக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க…” என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து “சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்… மேல வந்து படு…” என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் என் குரல் கேட்காதது போல முகம் திருப்பி கண்மூடிக் கிடந்தாள். அவள் பிடிவாதம் எனக்கு தெரியும்.அதிகாலை மூண்று மணிக்கெல்லாம் என்னை எழுப்பி குளீக்க வைத்து, அந்த ஆசிரமத்தில் நுழைந்தவுடன் அங்கே இருந்த சீடர்கள், என்னையும், என் மனைவியையும், தனி, தனியே பிரித்து, அவளை பெண்கள் பக்கத்திலும், ஆண்கள் பக்கத்தில் என்னை நிற்கவைத்து, இனிமேல், திரும்ப வெளியே வரும் போதுதான் ஒன்றாய் பிரிந்த இடத்திலேயே பார்க்க முடிய்மென்று அந்த சீடர் கூற, என் மனைவி உள்ளே நுழைந்தது முதல் அந்த சாமியாரின் பேரைச் சொல்லியபடியே மெய் மறக்க ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு என் ஞாபகமிருக்குமா என்று சந்தேகமே..என் மனைவி சென்றவுடன் வேறு வழியில்லாமல் நானும் அங்கிருந்த ஆண்கள் ஜோதியில் கலக்க ஆரம்பித்தேன். எல்லோரும் கும்பலாய் கொஞ்சம் கூட சத்தமில்லாமல் அமைதியாய் வருவது எனக்கு அதிசயமாயிருந்தது. பொதுயிடத்தில் கூட உரத்து போன் பேசுபவர்களா? இவர்கள்? அவர்களின் ஓழுங்கு எனக்கு ஆச்சர்யபட வைத்தது. எல்லோரும் அங்கிருந்த கோயில் சந்நிதிக்கு போனவுடன் அங்கே கடவுளுக்கு ஆராதனை செய்து பூஜை முடிந்தவுடன். “டோலக்” :” ஜல் …ஜல்…”ஜால்ரா போன்ற இசை கருவிகளை எடுத்துக் பஜனை பாடலை பாடி வாசிக்க ஆரம்பித்தார்கள். அப்படியே பஜனைகளை பாடியபடி நடக்க ஆரம்பிக்க.. அந்த அதிகாலை நேர அமைதியும், ஓரே ரிதத்தில் வரும் பஜனை பாடலும் என் மனதை அந்த பஜனை ரிதத்திக்கு தலை ஆட்டச் சொன்னது. நாம் அந்த சுருதிக்கும், அந்த காலை நேர அமைதியும் செய்யும் அதிகாலை ரீங்காரம் தான் என்று என் அறிவுக்கு எட்டினாலும், எனக்கு அந்த மெல்லிய இசை தரும் போதையும், அந்த அதிகாலை குளீரும் தேவையாகத்தான் இருந்தது. நானும் அவர்களுடன் பாட ஆரம்பித்தேன்.மெல்ல பாடியபடி ஓரு ரவுண்ட் வந்து மீண்டும் ஓரு ஆரதனை முடிந்தபின், எல்லாரையும் ஓரு பரந்த மைதானத்தில் ஓரு ஆளுக்கும், மற்றோரு ஆளுக்கும் நம்முடய கையை நீட்டினால் கிடைக்கும் இடைவெளியமைத்து உட்கார வைத்தார்கள். அந்த இடத்தை பார்க்கும் போதே ஓருவித அமைதி ஏற்பட்டிருந்தது. மைதானத்தின் நடுவே ஓரு பரந்து விரிந்த ஓரு மாளிகை, ஓருவிதமான மயக்கும் ரோஜா கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பின் பக்கத்தில் பனி படர்ந்த உயர்ந்த மலைகள், சுற்றிலும் உயர்தர புற்களால் அமைக்கப்பட்டிருந்த பச்சை ஜமுக்காளம் போலிருக்கும் பனிநீர் படிந்த புல்தரையும், எங்களுக்குள் இருந்த இடைவெளியும், அதனால் ஏற்பட்ட அமைதியும், மிக அற்புதம்.சுமார் ஓரு மணி நேரத்திற்கு அப்படி உட்கார்ந்திருந்தேன்.ஓரு மனிதன் எந்த விதமான செயல்களிலும் ஈடுபடாமல் சும்மா உட்கார்ந்திருப்பது மிக கடினமானது. முதல் பத்து நிமிடத்தில் யாரும் பார்க்காமல் மற்றவரிடம் பேசலாம் என்று பார்கும், ஆனால் அங்கே அவர்கள் கடைபிடிக்கும் ஓழுங்கு உங்களை கட்டுப்படுத்தும், பின்னர் உங்கள் மனதிற்குள் பல என்ன ஓட்டங்கள் ஓட ஆரம்பிக்கும், அங்கிங்கே அலைந்து சிறிது நேரத்திற்கு பிறகு எந்த வித எண்ணங்களூம் இல்லாமல் ஓரு வெறுமை உங்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும்.நீங்கள் அந்த சாமியாரின் அதி தீவிர பக்தராக இருந்தால், அவர் நாமத்தை ஜபிப்பதையே கடமையாய் கொண்டிருந்தால் நிச்சயம் அவர்ரால் தான் நமது மனத்திற்கு அமைதியேற்பட்டதாக தெரியும். அந்த சமயத்தில் ஓரு விதமான மெல்லிய இசை, மனதை வருடும் மெல்லிய இசை,சாரங்கி, வீணை, வயலின், போன்ற கம்பி வாத்தியங்களினால் வருடப்பட்ட இசை, அதனூடே “குமுக்கு,,,குமுக்கு…” என்று இடிக்காத தபலாவும் சேரும் போது.. அந்த மாளிகையின் முதல் மாடி பால்கனியில் அவர் தெரிந்தார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த கணமே தங்கள் கவலைகள் போக்கும் கடவுளின் அவதாரமாய் தெரிய..அவர் பெயர் சொல்லி அழைத்தார்கள்.அதற்குள் அவர் மெல்ல மாடியிலிருந்து இறங்கிவந்து, தரையிரங்கி, அங்கே அருகேயிருந்த பெண்கள் பக்கத்தில் மெல்ல நடந்து வந்து, அங்கேயிருந்த பெண்களில் சிலருக்கு மலர்களும், தங்கசெயினும், குங்குமமும், ஆண்களுக்கு வீபூதியும், மோதரமும் கொடுத்துவிட்டு அங்கிருந்த எல்லோரையும் ஓரு பார்வை பார்த்துவிட்டு, வலது கையை உயர்த்தி, எல்லாரையும் ஆசிர்வதித்துவிட்டு, அந்த் இசை முடிவதற்குள் உள்ளே சென்றுவிட்டார்.எல்லாம் முடிந்து நான் என் மனைவியை அந்த ஆசிரமத்தின் வாசலில்தான் பார்த்தேன். அவள் முகத்தில் ஏதோ ஓரு பிரகாசம் இருந்தது.” என்ன .. எப்படியிருந்தது தரிசனம்? என்றாள். நான் அவளிடம் “என்ன தரிசனம்?’ என்றேன்.. அவளுக்கு என்னைப் பற்றி தெரிந்திருந்தாலும், மனசு கேட்காமல் “உங்களுக்குள்ளா ஏதுமே தோணலயா?” ” அவரை பார்த்தவுடனே நம்ம மனசுல ஓரு சின்ன நம்பிக்க வரல?”அவளை மாதிரியான பக்தர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ஓரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரின் நேர்த்தியோடு அமைககபட்ட ஓரு திரைக்கதைதான் இந்த தரிசனம் என்று சொன்னால், அவள் மனது புண்படும் என்று தோன்றியதால்.. நான் ஏதும் பேசாமல்.. சிரித்தபடி, தலையாட்டினேன்.

டாஸ்மாக் சட்டங்கள்

Posted in Blogroll on டிசம்பர் 14, 2006 by cablesankar

ஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது. அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா? என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை…இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காமல் தடுப்பதே.. அதை விட்டு அரசே கடையை நள்ளீரவுவரை திறந்து வைத்துவிட்டு, வாடிக்கையாளர்களை குடிக்கவிட்டு..பிறகு வண்டி ஓட்டுபவரை பிடிப்பதை விட.. அந்த தவறை நடக்கவிடாமல் செய்யலாமே.. (இந்த ஐடியாவை கொடுத்த என்னை யாரும் திட்ட வேண்டாம்)
www.shortfilmindia.com

அம்மன் கண்திறந்த கதை….

Posted in Blogroll on டிசம்பர் 14, 2006 by cablesankar

சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்… அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா? அல்லது நடந்தது என்ன? வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ? எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ…?